பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


ஓரெட்டில் உணவும், ஈரெட்டில் கல்வியும்,
மூவெட்டில் புதல்வனும், நாலெட்டில் பொருளும்,
ஐயெட்டில் ஞானமும், அடைவதே சிறப்பாம் !
இன்ப வாழ்வுக் கிவையே குறிப்பாம் !

மலர்போல் மலர்ந்த மங்கைக்கு விரைவில்
திருமணம் செய்வதே சிறப்பாம்! அதனைத்
தள்ளி வைப்பதே தனிமைக்கு நெருப்பாம் !

தக்க வயது தாண்டிய பின்னர்,
நங்கை ஒருத்திக்கு நடைபெறும் திருமணம்
ஆறிப் போன சோறு போன்றது.

மூடித் திறந்து முன்னழகு காட்டியும்,
பிரச்சினைக் குரிய பின்னழகு காட்டியும்,
பக்குவ மாகப் படங்களில் நடிக்கும்
சக்கரைக் கட்டியாம் சரோஜா தேவியோ,
காதல் புரியும் காட்சிபல வற்றில்
நெருங்கி நடிக்கும் நேரந் தன்னிலும்,
கூச்சமோ நாணமோ கொண்ட தில்லையாம் !

ஆளான வயதில் ஆகாமல், நடிகைக்கு
நாளான வயதில் நடந்ததே திருமணம்,
அன்றுதான் நாணம் அவருக்கு வந்ததாம் !