பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

என்றும் அவரிடம் எழாத நாணம்
அன்று மட்டும் அவர்க்கேன் வந்ததோ
தெரியவில்லை! தெரிந்தும் பயனிலை !

இடியப்பம் விற்காமல் இரவிலும் பகலிலும்
அடியப்பம் விற்கும் அழுக்கு நடிகையர்
கையாளு கின்ற கற்பும் நாணமும்,
களிப்பும் சிரிப்பும் கடைசி வரையில்
நிலைக்கும் என்பது நிச்சய மில்லையே !