பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைய ஆய்வுப்பதிப்பாக அரிதின் முயன்று பதிப்பித்துள்ள அறிஞர் பெருந் தகை திருமிகு கோவை இளஞ்சேரனார் அவர்களுக்கு என் பாராட்டுக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன். அவர் சார்பாக இந் நூலின் மெய்ப்புக்களைத் திருத்தம் செய்தளித்த திரு கோ. நாகேந்திரன் அவர்களுக்கும் என் பாராட்டுக் 35 GT, இந்நூலின் வெளியீட்டுக்கு நிதியுதவி நல்கியுள்ள மத்திய அரசின் பண்பாட்டுத் துறைக்கும், அத்துறையின் செயலாளர் உயர் திரு டாக்டர் ஆர். வி. வைத்தியநாத அய்யர், இ. ஆ. ப. அவர்களுக்கும், இந்நூலகத்தைச் செவ்வனே பராமரித்துவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறையின் செயலாளர் உயர்திரு எம். ஏ. கெளரிசங்கர், இ. ஆ. ப., அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். இந்நூல் நன்முறையில் வெளிவரத் துண்டி ஆவன செய்துள்ள நூலக நிருவாக அலுவலர் திரு நா. தியாகராஜன், எம். ஏ., பி. எல்., அவர்களுக்கும், வெளியீட்டு மேலாளர் திரு அ. பஞ்சநாதன், எம். ஏ., எம், எல். ஐ. எஸ். அவர்களுக்கும், இந்நூலை நன்முறையில் அச்சிட்டளித்த சரசுவதி மகால் நூலக அச்சகத்தாருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். ஆய்வுக் கண்ணோட்டத்தோடும், பதிப்புப் பாங்கோடும் வெளிவரும் சூடாமணி நிகண்டின் முதல் மடலத்தைத் தமிழ்கூறு நல்லுலகம் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்கும் என நம்புகின்றேன். து. நா. இராமநாதன், இ. ஆ. ப. gు@త్FIT@! T; - மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இயக்குநர், 30–1-- 1999 சரசுவதி மகால் நூலகம், & نرم امام -- سیاسی ایران