இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சூரப்புலி
அது ஒரு சிறிய நாய்க்குட்டி. எப்படியோ அது அந்தப் பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தது. தெரு வழியாக அலுப்போடு மெதுவாக ஓடிக்கொண்டிருந்த அந்தக் குட்டி, மாளிகையின் வாயிலுக்குப் பக்கத்தில் வந்து கொஞ்ச நேரம் தயங்கித் தயங்கி நின்றது. அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்த வாயில் கதவைத் தாண்டி, உள்ளே நுழையலாமா என்று ஆலோசித்தது. உள்ளே பிருந்து யாராவது கூப்பிடமாட்டார்களா என்றுகூட எதிர்பார்த்தது. ஆல்ை தெருவில் போகிற நாய்க்குட்டியை யார் அன்போடு கூப்பிடு வார்கள் ? வீதிகளிலே இப்படி எத்தனையோ நாய்கள் அலேந்து திரி கின்றன : அவற்றை யாராவது கூப்பிடுவார்களா ? யஜமான