பக்கம்:செங்கரும்பு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


- - - - -

தொடரும் கதை: எட்டியவள் கைபிடித்தேன்! இதற்கா' என்று ஏக்கமுடன் கண்மொழியில் என்னைக் கேட்டாள்? கட்டியவள் தோள்மீதில் தலையைச் சாய்த்தே

    • . காதருகே என்னிதழைக் கொண்டு போனேன்.

ஒட்டியுற வாடிவரும் இரண்டு உள்ளம் உடலோடு துணைதேடும் உவகை தன்னை எட்டிக்காய் கதையென்ரு எண்ணிக் கொண்டாய் என்கையின் அணைப்பாலே இதனைச் சொன்ன்ேன் பேச்சில்லை! பெருமூச்சைப் பதிலாய் தந்தாள் பிறகென்ன வெறுப்பென்றேன்! பொறுமை - என்ருள். கூச்சமில்லை இதைக்கொள்ள குழ்ப்ப மில்லை, - \ கொண்டவரின் கருத்தினுக்குத் தடையே யில்லை. கீச்சென்று மூச்சென்றுக் கூவிக் கொண்டு - கிளிபோல மொழியாடும் குழந்தைச் செல்வம் ஆச்சன்ருே பத்தாக! அதனைக் கண்டும் - அருகினிலே வந்தீரே ஆசை மொண்டு! தொட்டிலிலே ஒன்றுறங்கும்! துவண்டு எந்தன் - தோள்களிலே ஒன்றுறங்கும் துணிந்த ஒன்று கட்டிலிலே போயுறங்கும் கவிழ்ந்து எந்தன் கால்களிலே ஒன்றுறங்கும் கவனித் தீரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/50&oldid=840787" இலிருந்து மீள்விக்கப்பட்டது