பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 செங்கோல் வேந்தர் காட்டைவிட கடும்புலி வாழும் காடு நல்லது என் மதித்தனர். புலவர்கள் அரசரைநோக்கி, ‘குழந்தைகளைப் பாதுகாக்கும் தாய்மாரைப் போல தும் குடிமக்களை விேர் பாதுகாக்க வேண்டும் என வற்புறுத்தினர்; குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிகளை வசூலிப்பதால் தீமையே அன்றி நன்மை விளையாது எனப் பகர்ந்தனர். சேரன் செங்குட்டுவன் மக்களே ஆட்சி செய்வதென் பது துன்பமே யன்றி இன்பம் எனக் கொள்ளுதற்கு இல்ல்ை எனக் கருதினன். மக்கள் ஏதானும் ஒரு காரணத்தால் வருத்தமுறின் வேந்தன் வருந்த வேண்டும். மழைபெய் வது குறைந்தால் அரசன் அஞ்சவேண்டும். ஆதலால், உயிர்களைப் பாதுகாக்கும். கடைமையையுடைய ம்ேலானி. குடியிற் பிறத்தல் என்பது துன்பமே யல்லாது தொழ்த் தகும்-பான்மையதன்று எனக் கருதினன். அதல்ை ஒரு க்ர்ள், ! -- " ::: * , - "மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம் பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம் குடிபுர் வுண்டும் கொடுங்கேர்ல் அஞ்சி மன்பதை காக்கும். நன்குடிப் பிறத்தல் துன்பும் அல்லது தொழுதகவு இல்' எனச் சாத்தனர் என்னும் புலவரிடம் கூறினன், மழை வளங் குறைந்தால் அரசனுடைய ஆட்சி தவறிற்று எனக் கூறுவது அக்காலத்து மரபு. அதனால்த்ான், வெள்ளைக்குடி, நாகனர் என்னும் புலவர் கிள்ளிவளவன் என்னும், சோழனைப் பற்றிப் பாடியதொரு பாட்டில் மழை பெய்ய, வேண்டிய காலத்திற் பெய்யாது பொய்த்தாலும், காட். டிலே விளைய வேண்டிய பொருள்கள் விளேயாது குறைக் தாலும் அரசாட்சியையே இவ்வுலக மக்கள் பழிப்பர் என எடுத்துக் காட்டி, உழவர்களைப் பாதுகாக்க வேண்டிய. கடமையை வற்புறுத்தினர். புறநானூற்றிற் காணப்படும். அப்பாட்டில் (செய்.35), -