பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- عن مج, تم ، يم اساسی انسان د: செங்கோல் வேந்தர் திே மந்து வளர்ந்து வருகிறது. அடிமேல் அடிவைத்துத். தர்ைந்து தளர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கடக்கிறது. டேக்கும் ப்ோழுதே தனது சிறிய கையை இப்படியும் Αμ அப்படியும் சீட்டுகிறது. கீட்டிக்கொண்டே உள்ளிடம் சேர்கிறது. அங்கே அதன் தந்தையார் உண்ண உட்கார்க் திருக்கிருர் அருகேவந்து கையை உண்கலத்தில் இடுகிறது. இட்டுத் தோண்டுகிறது. தோண்டினதைத் தரையிலே கழுவவிடுகிறது. அதனையே மீண்டும் எடுத்துக் கலத்திற். போடுகிறது. சிறிதெடுத்து வாயாற் கெளவுகிறது. பின் அக்கையையே மீண்டும் கலத்தில் இட்டுத் துழாவுகிறது. கொஞ்சம் சோற்றை எடுத்து வாயிற் கொள்கிறது. கைக் கெட்டியதெல்ல்ாம் வாய்க்கு எட்டி விடுகிறதா? சில சோறு கீழே விழுந்து விடுகின்றன. அவற்றுள் சில அதன் மார்பி லேயே விதந்து கிடக்கின்றன. போதாக்குறைக்குத் தந்தை, யாருக்குவேறு, சோறு ஊட்டவும் தொடங்கிவிடுகின்றது. அது அவர் வாயிற்பாதி உடம்பிற்பாதியாய்ச் சேர்கிறது. தந்தையார் உடனலக்கலே கன்ருகக் கற்றவர். குழவியோ அழுதகண்ணிர் துடைத்த கையொடு, தவழ்ந்து நடந்து: புழுதிபடிந்த கையோடு கொடுக்கிறது சோற்றை. பெறுவதா விடுவதா என்ற ஆராய்ச்சியே கிடையாது அப்பெரியார்க்கு. அவருடைய அறிவெல்லாம் எங்கேயோ போய்விடுகிறது. அவர் அறிவைக் குழந்தையின் இன்ப அன்பு மயக்கிவிடு கிறது. ஆ! இக்குழந்தையின் பெருமை என்னே! இன்னுெரு மகவின மகாவித்துவன் மீனுட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தந்திருக்கிரு.ர்கள். அதனையுங் காண்ப்ோம். தை தெருவிலே விளையாடிக் கொண்டிருக்கிறது. படு வந்து இன்னுங் குடிகொள்ளாத பேதை அக் தெருவில் திருவிடைமருதப்பர் உலா வருகின்ருர். அவர் யாவர் எனக் கேட்கிருள் அச்சிறுமி தன் அன்னையை. 'நம்மையேல்லாம் ஆட்கொண்டு நாம் வேட்டவை யளிக்க. அம்மையோடும் வரும்.அப்பர் அவர் என்னும்விடையைபெறு: கிருள். உடனே சிறுமி அவர் முடியில் உள்ள அம்புலியை,