பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவை ஆற்றிய பங்களிப்புகள் ஆய்வுக்கு பயன்படுவதுமட்டுமல்லாமல் மேலும் அவை செழுமையுற வழிகாட்டியும் உள்ளது.

தம் இறுதிகாலத்தில் அவர் தந்த இந்தக் கட்டுரைகள் தமிழுலகுக்கு மேலும் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். இதனை வெளியிடும் வேமன் பதிப்பகம் நண்பர் வேலாயுதம் நற்றமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் ஆர்வம் உள்ள இளைஞர். இவரது பணி மேலும் தொடர தமிழ் மக்கள் அளவில் வாழ்த்துவதும் நன்றி கூறுவதும் சாலப் பொருந்தும்.

அன்புடன்


கோ. எழில்முத்து