பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளா்க்கும்

சிந்தனைகள்

--------

1. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழு

1. தமிழ் நாட்டின் தலைநகராய் சென்னையில் அரசாங்க ஆதரவுடன் தமிழ்நாட்டுக் கல்வி அமைச்சர் அவர்கள் தலைமையில் நிறுவப்பெற்றுள்ள தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழுவிற்கு ஒரு நிலையான அலுவலகம் சென்னையில் இருக்க வேண்டும்.

2. தமிழ் ஆசிரியர்களும், அறிஞர்களும், அன்பர்களும் அந்த அலுவலகத்திற்கு அனுப்பும் ஒவ்வொரு யோசனையும் 'யோசனைகள் பட்டியலி'ல் (Register of Suggestions) பதிவு செய்யப்பெற்று அவைபற்றி அவ்வப்போது ஆலோசிக்கப்பெற வேண்டும்.

3. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழு’ தமிழ் அறிஞர்கள் எந்த எந்தப் புதிய தலைப்புக்களில் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும் என்பதை அவ்வப்போது ஆராய்ந்து வழி காட்ட வேண்டும். -