பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

செந்தமிழ் வளா்க்கும் சிந்தனைகள்


Army, (2) Madras Engineers, (3) Manual of Madras administration என்னும் நூல்களைக் குறிப்பிடலாம். இவற்றைப் புதிய விளக்கக் குறிப்புக்களுடன் பதிப்பித்தல் வேண்டும்.


3. மேற்குறிப்பிட்ட நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும்.


4. கிறிஸ்தவப் பாதிரிமார்கள் 16, 17-ஆம் நூற்றாண்டுத் தமிழகம் பற்றித் தங்கள் மேல் அதிகாரிகட்கு வரைந்துள்ள கடிதங்கள் தமிழக வரலாற்றிற்குப் பெரிதும் பயன்படுவன. எனவே, பிரெஞ்சு மொழியில் உள்ள அக்கடிதங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழி பெயர்க்கப்படல் வேண்டும்.


5. ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு ஓர் அாிய தமிழ்ச் செல்வம்; வரலாற்றுக் கருவூலம். அத்தகைய நூல் தமிழில் அது ஒன்றே. அந்நூல் நன்முறையில் பதிப்பிக்கப் பெற வேண்டும்.

VII. கல்வெட்டு---பட்டய---ஆராய்ச்சி

1. தமிழறிவு சான்ற கல்வெட்டு நிபுணர் குழு ஒன்று நிறுவி, அக்குழு கல்வெட்டு, புதை பொருள், அறநிலையப் பாதுகாப்பு ஆகிய கழகங்களின் துணைகொண்டு, முன்னரே