பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

11


 கள் யாவும் புகைப்படங்கள் எடுக்கப் பெற்றுத் தக்க விளக்க---ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் வெளியிடப் பெற வேண்டும்.


5. தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களிலும் துணர்ந்து கிடக்கும் சுருங்கை வழிகளைத் துருவி ஆராய்தல் வேண்டும்.

IX விஞ்ஞானத்தின் துணையால் பழங்கலைச் செல்வங்களைப் பாதுகாத்தல்


இக்காலத்தில் வளர்ந்திருக்கும் விஞ்ஞான வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தாெண்டாற்றலாம். எடுத்துக்காட்டாக:


1. தமிழ் பற்றி வெளி வந்துள்ள பழமையான சிறந்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நூல்களையும் தேடித் திரட்டி அவற்றைத் தொகுத்து முறைப்படுத்தித் தொகுதி தொகுதியாக வெளியிட வேண்டும். நொறுங்கிப் போகும் நிலையில் உள்ள நூல்களைப் புதி தாகப் பதிப்பிக்க முடியாவிட்டால் ஒளிப்படம் (Micro Film) எடுத்துப் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்க முடியாத பழைய ஏட்டுச்சுவடிகளையும் ஒளிப்படம் (Micro Film) எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.