பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்


2. 'தமிழ் நாட்டுச் சிற்பங்கள்’ என்னும் தலைப்பில் தமிழ் நாட்டுக் கோயில்களில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து விளக்கக் குறிப்புக்களுடன் நுாலுருவில் வெளியிட வேண்டும்.


3. 'தமிழ் நாட்டுக் கோயில்கள்' என்னும் தலைப்பில் ஒவ்வொரு கோயிலின் அமைப்பைப் பற்றிய வரைப்படங்களும் (Plans), கோயிலின் பல்வேறு காட்சிகளையும் புலப்படுத்தும் புகைப் படங்களும் கொண்ட நூற்றாெகுதிகளை வெளியிடல் வேண்டும்.


4. 'தமிழ் நாட்டு ஒவியங்கள்’ என்ற தலைப்பில் ஆங்காங்குக் காணப்பெறும் பழைய ஒவியங்களைப் புகைப்படம் எடுத்து, விளக்கக் குறிப்புக்களுடன் நுாலுருவில் வெளியிட வேண்டும்.


5. 'தமிழ் தட்டு அணிகள்' என்னும் கலேப் பில் தமிழ் நாட்டுக் கோயில்களிலும் குறுநிலக் கிழார்கள் வீடுகளிலும் உள்ள பழங்கால அணிகளைப் புகைப்படங்கள் எடுத்து விளக்கக் குறிப்புக்களுடன் வெளியிட வேண்டும்.


6. 'தமிழ் நாட்டுப் போர்க்கருவிகள்’ என்னும் தலைப்பில் பழங்காலத்துப் போர்க்கருவிகளாய் இன்றும் திருநெல்வேலி இராமநாதபுரம் முதலிய மாவட்டங்களில் கிடைப்பனவற்றைத்