பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

29




XXXIII. தமிழ் இலக்கியத் துணைவன்

ஆங்கிலத்தில் வெளியிடப் பெற்றுள்ள 'Companion to English literature' என்பது போன்ற ஒரு நுாலைத் தமிழில் வெளியிட வேண்டும். அதில் சிறப்பாகத் தமிழ் இலக்கியங்களில் வரும் கதைக் குறிப்புக்களுக்கு உரிய விளக்கங்கள் அமைய வேண்டும்.

XXXIV ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு

தமிழ் நாட்டின் தலை சிறந்த ஆராய்ச்சி அறிஞர் பலர் தாம் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை நூல் வடிவில் திரட்டி வெளியிடப் போதிய வசதி இன்றி வாளா இருக்கின்றனர். அவர்தம் கட்டுரைகளைத் தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக் குழு தானாகவோ, தக்கதொரு நிலையம் வாயிலாகவோ வெளியிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.