பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்




XXXV. மக்கள் இலக்கியம்

(1) தமிழ் நாட்டுப் பழமொழிகள்
(2) தமிழ் நாட்டு விடுகதைகள்
(3) தமிழ் நாட்டு நாடோடிப் பாடல்கள்
(4) தமிழ் நாட்டுப் பாமரர் பகர்ச்சி

இவை தனித்தனி அகராதிகளாகத் தொகுக்கப் பெற வேண்டும்.

XXXVI. குழந்தை இலக்கியம்

(1) தமிழ் நாட்டுக் குழந்தைகட்குப் பயன்படும் வகையில் மேல் நாடுகளில் வெளியிடப் பெற்றுள்ளது போல, பல்வேறு துறைகளிலும் வண்ணப்படங்களோடு கூடிய அழகிய எளிய நூல்கள் குறைந்த விலையில் வெளிவர, தனிக் குழு அமைத்து ஆவன புரிய வேண்டும்.

(2) முக்கியமாகக் குழந்தைகட்கெனத் தனிக் 'கலைக்களஞ்சியம்' விரைவில் வெளிவர ஏற்பாடு செய்ய வேண்டும்.