பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்


 1. 'சென்னை இராஜ்யம் தமிழ் நாடு' ஆதல் வேண்டும்.

2. தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் 'ஸ்ரீ' 'திரு' ஆதல் வேண்டும்.

3. பொருள் சிதைந்து வழங்கும் ஊர்ப் பெயர்கள் பொருள் பொதிந்தனவாய் உருப்பெறுதல் வேண்டும்.

4. தமிழ்ப் பெயர்கட்குச் சரியான உச்சரிப்புடைய ஆங்கிலப் பெயர்களை வழங்க வேண்டும்.

XL. ஆராய்ச்சி மாநாடுகள்

வரலாறு, விஞ்ஞானம், கிழக்கு நாட்டுக்கல்வி முதலியன பற்றி அனைத்திந்திய அடிப்படையில் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவது போல த மி ழ் ஆராய்ச்சி மாநாடுகள் ஆண்டு தோறும் நடைபெற வேண்டும். அதன் செயல் முறைகள் நூலுருவில் வெளி யிடப்பெறவேண்டும். சிறப்பாக அம்மாநாட்டில் படிக்கப் பெறும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நூல்வடிவில் வெளியிடப் பெறவேண்டும்.