பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <) (கலந்து கொள்ளவில்லை. இதனால் டச்சுக்காரர்களுக்கு இத்த) முத்துக் குளிப்பு ஒரு பெரிய இழப்பீடாக அமைந்தது. இதனால் வேதனையு மச் சஞ்சலமும் கொண்ட டச்சுக்காரர்கள். அதிகாரப் பூர்வமான ஒரு துதுக்குழுவினரை சேதுபதி மன்னரிடம் அனுப்பினர். அவர்கள் சேதுபதி மன்னரைச் சந்தித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டனர் 1. சமீபத்தில் நடந்து முடிந்த முத்துச்சிலாபத்தில் பெரியதம்பி மரைக்காயரது சூழச்சியினால் முத்துச்சிலாபம் தோல்வியில் முடிந்ததாகவும் அதனால் ஏற்பட்ட இழப்பு 24,000 பரோதாஸ் (டச்சு நாணயம்) பணம் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். 2. இந்த இழப்பிற்கு காரணமாக அமைந்த பெரிய தம்பி மரைக்காயரையும் அவரது மூன்று கூட்டாளிகளான மரைக்காயர்களையும் தண்டித்தல் வேண்டும். 3. இந்த முத்துக் குளிப்பில் தோல்வி ஏற்படும் வண்ணம் பிரச்சாரம் செய்ததுடன் வேதாளைக்குச் சென்ற டச்சு ஊழியர்களை மிகவும் அவமதிப்புடன் நடத்திய வேதாளை மரைக்காயர், மணியக்காரரையும் மற்றும் வேதாளையைச் சேர்ந்த மியான் நெய்னார் குட்டி நெய்னார் என்பவர்களையும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒப்படைத்தல் வேண்டும் டச்சு துதுக்குழுவின் இந்தக் கோரிக்கைகளை கேட்டு அறிந்த சேதுபதி மன்னர் அவர்களுக்கு புத்திமதி சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். மறப்பதும் மன்னிப்பதுமாகிய கிறிஸ்தவ சமய அடிப்படையில் அமைந்த மன்னரது முடிவு டச்சுக்காரர்களுக்கு ஆறுதலை அளிக்கவில்லை. டச்சுக்காரர்களுக்கும், சீதக்காதி மரைக்காயருக்கும் இடையே பகைமை தொடர்ந்தது. \- 掌掌掌 أمـ