பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ৰঙ্গ வள்ளல் சீதக்காதி திருமண வாழ்த்து r இணைப்பு V எட்டையாபுரம் உமறு கத்தாப் புலவர் பாடிய - H-H - - வள்ளல் சீதக்காதி திருமண வாழ்த்து 1. கார் கொண்ட ஞாலம் ககனாதி யும்பலவும் ஏர்கொண் டமைத்த இறையொருவ னைப்பணிவாம் 2. சீர்மேவு செல்வச் சிறப்பாகி எப்பொருட்கும் பேர்மேவி நின்ற பெரியோனைப் போற்றிசெய்வாம் 3. முத்தொளியில் வந்த முகம்மது றசூல் நபியை நித்தலுமே நெஞ்சில் நினைந்து துதிப்பாமே 4. தாயிற் கருணைவைத்த தற்பரனைப் போற்றிசெய்வான் வாயிற்கல் வைத்த அபூ பக்கர் பதம்பணிவாம் 5. விண்பாத்த வெங்கதிரோன் மெய்கறுப்பச் செங்கமலக் கண்பார்த் தருள்உமறு கத்தாப் சரண்நினைவாம் 6. வேதப் பொருள்தெரிந்து மிக்கபுவி யிற்சிறக்க ஒதும் உது மானை எம துள்ளந் தனில்நினைவாம் 7. வாட்டிறத்தால் நேர்ந்த மருவார் குறும்படக்கும் ஆட்டிறத்தால் மிக்க அலியார் பதம்பணிவாம் 8. ஆதி நபிமகளார்க் கன்பா மகவான - நீதி அசன்உசைனை நித்தலுமே போற்றிசெய்வாம் 9. தகையதீன் எல்லாம் தழைக்கப் புவியில்வந்த முகையதீன் செய்ய முளரிப் பதம்பணிவாம் 10. கருங்கொண்ட லார்சர்க் கரைமழை பெய்யவந்த பெருங்கொண்டல் வாவா பிரசமலர்த் தாள் பணிவாம் 11. நிதக்கத்துள் ளாக்குபிறர் நெஞ்சம் பிளக்கவரும் சதக்கத்துல்லா உபய தாமரைத்தாள் போற்றிசெய்வாம் 12. ஒருவ னருள்பெற் றுலகில் ஒலி யாகவந்த தருமுதலி யார்லெவ்வை தாமரைத்தாள் போற்றிசெய் ད།།