பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து r 339. மையலிலே சிந்தையுறு மாற்றலரை வென்றவரே கையிலே வாள்பிடிக்கக் காணாம் எனவுரைப்பார் 340. மதிகொண்டடையாரை வென்றமண வாளன் கதிர் கொண்ட கூரிலைவாள் கையிற் பிடியுமென்பார் 341. மாற்றலரை வெல்லுவது மாத்திரமல் லாமலெம்முன் கோற்றெடிகை வாள்பிடிக்க்க் கூடுமோ என்றுரைப்பார் 342. மைத்துனன்மா ரிந்த வழக்குரைக்க மாறத சுத்த ரணவீரத் தோழர் மறுத்துரைப்பார் 343. தென்னவனை வென்றரண சிங்கமெங்கோ னிச்சிறிய கன்னியர்கள் முன்னுே கதிர்வாள் பிடிப்பதென்பார் 344 கோதைவடி வேலெடுத்த கொற்றவனென் றெண்ணாமல் பேதையர்கை வாளைப் பிடியுமெனவுரைத்தீர் 345. கடவா ரணந்தகர்த்த கைவாளை வீரனையும் மடவார்கள் முன்னே வடிவாள் பிடியுமென்றீர் 346. என்ன இவர்க ளியம்ப மனமகிழ்ந்து மன்னவர்கோன் கீர்த்தி வழங்குந் துரைப்பெருமான் 347. பூவையர்கள் செவ்வாய் பிதைத்துக் குரவையிடக் காவலவன் செங்கதிர்வாள் கையிற் பிடித்தனரே 348. மங்கையர்க்குங் காதில் வரிசைபல உள்ளதெல்லாம் சங்கைபெறச் சொல்லித் தடக்கைவாள் வாங்கினரே 349. வாகைக் கதிர்வடிவாள் வாங்கியபின் மானைண்ணல் பாகைதிருப்பிப் பகருவார் பாவை நல்லார் ldégorldé&($535(2i eum 9p$451 350. நன்மைமண வாளனையும் நங்கையையும் கண்குளிரப் பொன்மயிலார்கள் புகழ்ந்து புகலலுற்றர் 351. பேர்பெறுவீர் வாழவு பெறுவீர் மகப்பெறுவீர் சீர்பெறுவீர் எல்லாச் சிறப்பு மிகப்பெறுவீர் 352. என்றுமிக வாழ்த்தி யிதயங்குளிர்ந்துமின்னர் மன்றல் மகிழ்நயத்து மன்னனைப்பார்த் தேதுசொல்வார்