பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து <ബ r ר 366. மதிச்சோங்கு பச்சை மரகதத்தாள் கொண்டுவரும் புதுச்சோங்கு செந்நெல் பொருப்பொன்று தோணிகளும் 367. உண்மையுடன் வெள்ளி உருப்பியா ஏற்றிவரும் வன்மைபெறு கின்ற வளமும்வள மாய்க்கொடுத்தார் 368. விடாத செம்பொன்மணி வீடுங் கொடுத்துநிதம் நாடா துலா நிகழும் நல்லவெள்ளை வாரணமும் 369. கடக்குமலை வீசு கடலை யெடுத்துறிஞ்சும் நடக்கும்மலை போலவரும் நல்லவெள்ளை வாரணமும் 370. கவடிகள்மெய் பாயக் கவடிவைத்துத் தாவும் கவடிவைத்துத் தாவுங் காமர் குரகதமும் 371. முந்து பதுமை குடியிருக்கும் மொய்ம்பனுக்குத் தந்தர் சிவிகை தனிச்சிவிகை யுங்கொடுத்தார் 372. நாடோறுங் கீர்த்திகொண்டு நானிலத்தில் நாவலர்கள் ஈடேற வந்தவனுக் கேறுகன தண்டிகையும் 373. சருவந்து பூமுடியும் தங்கச் சரப்பளியும் பருவந்தப் பாதுதவிர் பாங்கான தோள்மூடி 374, முன்கை முதாரி முழுவயிரப் பொற்கடகம் நன்குபெறு செம்பொன் நவரத்ன மாலிகையும் 375. துய்யகதிர் முத்துத் துறாப்பதக்கம் கண்டசரம் செய்யவிர லாழியருஞ் செம்பொன்னுல் தோள்வளையும் 376. மாணிக்கச் சட்டை வரும்பொற் கபாய்கள் மற்றும் பூணத் தகுவதெல்லாம் பொற்பாக வேகொடுத்தார் 377. வரிசைபெற வாங்கும் வரும்பெரிய கத்திவட்டப் பரிசை யடனே பருவாளுங் கைக்கொடுத்தார் 378. நீளுமுனை காட்டியெழ நேரிசமுங் கைவேலும் ஆளு முனைச்சுரிகை ஆயுதமுந் தாங்கொடத்தார் 379. வேளாஞ் சினேகவி வேந்தர்முடி வேந்தனெனக் காளாஞ்சி குஞ்சங் கணமிகுவெண் சாமரமும் \ الـف