பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

செம்மொழிப் புதையல்


என்று முன்மொழிந்து, கணவன் போர்வல் மறவன். என்றும், போரையும் அதற்குரிய அறம் பிழையாது செய்து வெற்றி கொள்வதில் வீறுடையன் என்றும் கூறுவாளாய்,

“கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி பெரும.”

என்றும், இவ்வாறே அவனுடைய நடுவு நிலைமை, ஈகைச் சிறப்பு ஆகியவற்றையும்,

“பால்கொள லின்றிப் பகல்போல் முறைக்கு ஒல்காக்
கோல்செம்மை யொத்தி பெரும.”

என்றும்,

“வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு
ஈதல்மாட்டு ஒத்தி பெரும”

என்றும்.

கூறுவது இன்றைய தாயர்க்கு நல்ல படிப்பினையாகும். இவ்வியல்பு பற்றியே, பொன்முடியார் என்ற சான்றோர், ஒருதாய் தன் மகனுக்குக் கடமையுணர்வு நல்கும் கட்டுரை வடிவில்,

 “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.”

என்று கட்டுரைக்கின்றார்.

இங்ஙனம் தம் குடியில் வாழும் மக்கள் கடமையுணர்வும் நல்லொழுக்கமும் கொண்டு சிறத்தல் வேண்டுமெனக் கருதும் தமிழ் மகளிர், தாம் வாழும் நாட்டின் நலத்தையும் தம் நெஞ்சில் கொண்டு, வாய்த்த போதெல்லாம், “நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க” “விளைக வயலே வருக இரவலர் “பசி இல்லாகுக பிணி சேண் நீங்குக” “வேந்து பகை தணிகயாண்டு பல நந்துக” “அறம் நனி சிறக்க அல்லது கெடுக அரசு முறை செய்க களவு இல்லாகுக” “நன்று பெரிது சிறக்க தீது இல்லாகுக!” “மாரி வாய்க்க வளம் நனி சிறக்க” என விழைந்து வேண்டுவர்.

மகளிருடைய மனைவாழ்வில் கணவனது காதலுள்ளம் தன்னின் நீங்கி வேறு மகளிர்பால் செல்லுமாயின், அம்மகளிர்க்கு