பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

269


பெருமை இனிது உணரப்படுகின்றது. தன் உயிரைக் கொல்லுதற்குப் போந்த அரசபுத்திரன் ஒருவனைப் பொறுத்து வீரனாக்கிச் சிறப்பித்த ஆண்டகை பாபர் வேந்தரை அறியாதார் யாவர்? இந்து சமயத்தவரையும் மகமதிய சமயத்தவரையும் ஒப்பமதித்து உயர்நலம் புரிந்த அரசர் பெருந்தகையான அக்பரை அறியாதவர் அறிவு பெறாதவர் அல்லரோ? அப்பெருந்தகைகள் ஆற்றியுள்ள நலம் பலவும் எழுதப்புகின், இக்கட்டுரை வரம்பின்றி விரிவதல்லது அவர்தம் புகழ்நலம் அடங்கிவிடும் என எண்ணுவது சிறுமையன்றோ? இந்நலமனைத்திற்கும் அடிப்படையாகவுள்ளது இசுலாம் சமயத்தின் இயல்பே என்பதை மறத்தல் ஆகாது.

- -

இந்தியநாட்டின் தென்பகுதியாகிய நம் தமிழ்நாட்டை ஆண்ட முடியுடைவேந்தர் மூவருள் சோழர்கள் காலத்தில், நிலப்படையுடன் கடற்படையும் இருந்து நாடுகாத்துவந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததாகும். ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய’ இராசராசன் முதலிய சோழமன்னர்கள், கடற்படை கொண்டு சென்று பகைப்புலங்களை வென்றனர். அவர்கட்குப் பின் வந்த சோழமன்னர்கள் வீழ்ச்சியடையவே, கடற்படையும் கெட்டழிந்தது. பிறநாட்டு மக்களுடைய கூட்டுறவும் அவர்கள் காலத்திற்குப்பின் கிடைப்பது அரிதாகியது. ஆயினும் இக்கடற்படையும், பிறநாட்டு மக்களுடைய கூட்டுறவும் இம் மகமதிய மன்னர் பெருமக்களால் மறுவலும் உண்டாயின.

-

நம் இந்தியநாட்டின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள், புத்த சமய காலத்தில் ஏனை நாடுகளிற் பரவி அவற்றோடு சீரிய தொடர்பு பெற்றிருந்தனர். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அத்தொடர்பை நெகிழ்த்து, தம் நாட்டெல்லைக்குள்ளேயே அடங்கியமைந்து விட்டனர். அதனால், இந்நாடு தன்னிலையில் அடங்கி, பிறவற்றோடு தொடர்பின்றித் தனிப்பதாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில், இசுலாம் சமயத்தவரின் பெருந்துணையால், அத்த்ொடர்பினை மீட்டும் நம் நாடு பெற்றது; ஆயினும் அத்தொடர்பு பண்டே யிருந்தது போன்றில்லை. புத்த சமய, காலத்தில் நம் நாட்டவர் வேறு நாடுகட்குச் சென்றதுபோல, இக்காலத்தில் செல்வது ஒழிந்தனர். பல ஆயிரக்கணக்கினரான வேற்று நாட்டுமக்கள் நம் நாட்டிற்கு வரத்தொடங்கினர். மகமதிய சமயத்தவர் மாத்திரம் வேறு