பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18. இடையூறு கண்டு மனந்தளராமை

இது, 15ஆவது தலைப்புக் கட்டுரையான உறுதி கொள்ளுதல்' என்னும் கட்டுரை போன்றதொரு தலைப்புப் போல இருந்தாலும், அஃது, ஒரு செயல் தொடக்கத்தில், அதைத் தொடங்கும் முன்னரோ, தொடங்கிய பின்னரோ ஏற்படும் எதிர்பாராத எதிர்ப்புகளையும் அல்லது சுமைகளையும் கண்டு, உள்ள உறுதியும் உடல் உறுதியும் தளர்ந்து விடாமல் இருத்தல் வேண்டும் என்னும் கருத்துகளை உள்ளடக்கியதாகும். ஆனால், இக்கட்டுரை, ஒரு செயல் தொடங்கி நடைபெற்று வருங்கால், அச் செயல்நிலையிலிருந்தோ, அச்செயலுக்கு அயலான, ஆனால் அதற்குத் தொடர்பான புறநிலைகளிலிருந்தோ, எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ ஏற்படுகின்ற இடர்ப்பாடுகளையும், இடையூறுகளையும் கண்டு, தாம் தொடக்கத்தில் கொண்ட மன உறுதியிலிருந்து, தளர்ந்துவிடாமை ஆகும். எனவே இந்நிலை, ஒரு செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஏற்படும் ஒரு நெகிழ்ச்சி நிலையைக் குறித்ததாகும் என்க.

1. அஞ்சாமையும் பிறதுணையும்

ஒரு செயலைச் செய்ய முற்பட்டவர்க்குப் பொருளும் கருவியும் முதல் துணைகளாகவும், அத்துறைச் செயல் வல்லார், அல்லது தம் நலம் நாடுகின்ற நண்பர் இரண்டாந் துணையாகவும் அமைதல் போலவே, வேறோர் இன்றியமையாத் துணையும் உண்டு. அவ்வின்றியமையாத் துணையிருப்பின் பிறதுணைகள் இல்லாமற் போயினும் தாழ்வில்லை என்பார் திருக்குறள் ஆசான். அந்தத் துணைதான் அஞ்சாமை ஆகும். இந்த அஞ்சாமை என்னும், உள்ளத்தின் உணர்வு ஒன்று துணை வருமாயின் எவ்வகைக் கடினமான செயலுக்கும் வேறு பிறதுணைகள் இல்லாமற் போயினும், தாழ்வில்லை. ஆனால், செயலை மட்டும் எச்சமில்லாமல், மிச்சம் வைக்காமல், மீதியாக விடாமல் பிறகு செய்து கொள்ளலாம் என்று எண்ணி விடாமல், செய்துவிட வேண்டும்.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.

(497)

அஞ்சாமை இருந்தால் பிறதுணைகள் வேண்டாம் என்றே