பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

157



நீர் விடுதல், தேய்த்தல், கழுவுதல், மறைவிடங்களில் சேரும் அழுக்குகளை அகற்றல், செயல்களுக்கும், உடல் இயக்கத்திற்கும் உதவும் உறுப்புகளைச் சிறப்பாகத் துய்மை செய்தல் என்பவற்றை ஒருவர் செவ்வையாக உணர்ந்திருத்தல் வேண்டும்.

நம்மில் எத்தனைப் பேர் குளிக்கும் பொழுது, சரியாகப் பல் விளக்குகிறார்கள்? கண்களைக் கை விரலால், நீர் கொண்டு உள்ளலம்பித் தூய்மை செய்து கொள்கிறார்கள்? காதுகளை விரலால் உள்குடைந்தும், மூக்குத் தொளைகளை விரலை உள்விட்டுத் துய்மை செய்தும், கொப்பூழ் போலும் அழுக்கடையும் இண்டு இடுக்குகளை விரலால் அழுத்தித் தேய்த்துக் குடைந்தும் கொள்கிறார்கள்? பலர், சிறுநீர் கழித்தவுடன், அவ்வுறுப்பை நீரால் கழுவுவதே இல்லை; பலர் மலங்கழித்தவுடன், எருவாயை வெளிப்புறம் மட்டுமே நீர் கொண்டு அலம்பும் தன்மையையே அறிந்திருக்கின்றனர். விரலில் நீர்விட்டு நீர்விட்டு, எருவாயின் உட்புறத்துச் சுவர்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மலப்பசையை, முரமுரப்பாக ஆகும் வகையில், தூய்மை செய்வதை அவர்கள் அறிந்திருப்பதில்லை. ஐயோ, இதனால் அவர்கள் எத்தனை வகையான உட்புறக் கீழ்ப்புற நோய்களை வருவித்துக் கொள்கிறார்கள். பெரும்பாலோர் விரல்களில் உள்ள உகிர் நகங்களில் உள்ள அழுக்கைக் குளிக்கும் பொழுது நீக்குவதோ, அல்லது அவ்வழுக்குகள் சேரா வண்ணம் உகிர்களையே ஒட்ட வெட்டுவதோ இல்லை. சிலர் கைவிரல்களில் உள்ள உகிர்களில் மட்டுமே கவனம் செலுத்துவதும், கால் விரல்களைப் பற்றியே கவலையில்லாமல் இருப்பதும் அறியப்படலாம்; அதனால் சிலரின் கால் விரல்களில் உள்ள உகிர்கள் வளைந்தும், சிதைந்தும், திருகல் முருகலாகியும், அழுக்கடைந்தும், வெடித்தும் இருப்பதைப் பார்க்கலாம். கால் விரல் இடுக்குகளை அவர்கள் கவனிப்பதே இல்லை. நம்மில் பலர் கால்களைக் கழுவுவது என்றால், முகம், கை, இவற்றைக் கழுவிய பின்னர், எஞ்சியுள்ள செம்பு நீரைக் கால்களின் மேல் ஊற்றிக் கொள்வது என்றே அறிந்திருக்கிறார்கள். ஒரு கால் பாதத்தால் மற்றொரு காலை நீர்விட்டு அழுந்தத் தேய்த்தும், பாதப் புறங்களைச் சொரசொரப்பான காறைத் தரையிலோ கல்லிலோ திருப்பித் திருப்பி நீர்விட்டு ஊற வைத்து, நொதி தோல்களைத் தேய்த்தும், அகற்றுவதே இல்லை.

அதனால் சிலர் பாதங்களும், பாதப் பக்கச் சுவர்களும், முருடுதட்டியும், வெடித்தும், அழுக்கடைந்தும், குழிகள் விழுந்தும் இருப்பதைப் பார்க்கலாம். சிலர் கால்களை முழங்கால் வரை கழுவுவதே இல்லை. தேவையானால், கால்கள் கழுவும் ஒவ்வொரு முறையும், எருவாய், கருவாய், தொடையிடுக்குகள் இவற்றையும் நீர்விட்டுக் கழுவுவது மிகவும் நல்லது. மலங்கழித்துத் தூய்மை செய்கையிலும், இரவு படுக்கைக்குப் போகு முன்பும் இவ்வாறாக நீர்விட்டு அலம்புதல்