பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

17



முன்னுரை

திருவள்ளுவர் இவ்வுலகத்தைப் 'பொருள் உலகம்' என்று குறிப்பிடுகின்றார். எனவே, 'செய்க பொருளை' என்றும் கட்டளை இடுகின்றார். "பொருளே, மதிப்பில்லாத எவர்க்கும் மதிப்பை அளிப்பது". எனவே பொருளைப் பெறுவதற்கு ஏதாவது முயற்சி செய்தல் வேண்டும். ஆனால், பொருளைப் பெறுவதற்குப் பெறுவதே முழு முயற்சியாகவும் செயலாகவும் இருந்துவிடக் கூடாது.

பொருள் அழியக்கூடியது. எனவே அழியக்கூடிய பொருளைப் பெற்று, அழியக்கூடாத செயல்களைச் செய்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து.

அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல், (333)

இனி, செயல்கள் பலவகையானவை. அவற்றுள் அழியும் செயல்கள் பல அழியாச் செயல்கள் சில எளிய சொற்கள் பல அரிய செயல்கள் சில. அவற்றுள்ளும் அரிய செயல்களாகவும் அழியாச் செயல்களாகவும் தமக்கும் பிறர்க்கும் பயன்படக்கூடிய செயல்களாகவும் இருப்பவை மிகவும் சில.

எளியவர்கள் எளிய செயல்களையே செய்து மறைந்து போகின்றனர். வலியவர்கள் அஃதாவது பெருமை உடையவர்கள், செய்வதற்குக் கடினமான அருமையுடைய செயல்களையே செய்து, புகழ்பெற்று நிலைநிற்கின்றனர்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய சொல். (975)

செய்வதற்கு எளிய செயல்களையே இவ்வுலகில் பெரும்பாலும் அனைவரும் செய்கின்றனர். அவை அறிவதற்கும் எளிது. ஆற்றுவதற்கும் எளிது. எனவே, அவற்றையே அனைவரும் தேர்ந்து, விரும்பிச் செய்கின்றனர். அத்தகைய செயல்களைச் செய்பவர்களை இவ்வுலகம் நினைவில் வைப்பதில்லை; அவர்களின் மறைவுடன் அவர்தம் செயல்களும் மறைந்து போகின்றன. அவை அவர்களுக்கே பயன் தந்தன; அவர்களுடனேயே மடிந்தும் மறந்து போயின.

செய்வதற்கு அரிய செயல்களாகவும், அனைவர்க்கும் பயன்படும் செயல்களாகவும் இருப்பவை, அவற்றைச் செய்தவர்கள் மறைந்தாலும், மறையாமல், மற்றவர்க்கு என்றென்றும் பயனுடைய செயல்களாக விளங்குகின்றன.

தமக்கும் பிறர்க்கும் இன்பம் தரும் பயனுடைய அழியாத செயல்களையே அறச் செயல்கள் என்று நம் முன்னோர் கருதினர். அச் செயல்களே ஒருவர் செயத்தக்க செயல்களாகும். 'செயற்பாலது