பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

செயலும் செயல் திறனும்



சொல்லியாகல் வேண்டும். அத்தகையவர்கள் துன்பங்களின் பொருட்டாகவே தவறான நெறிகளில் செல்ல முற்படுவர். இனி, இவர்களையுமல்லாமல் இயல்பாகவே எந்தத் தாழ்வான நிலையிலும், தங்களை நேர்மை வழிகளிலிருந்து தாழ்த்திக் கொள்ளாதவர்களுக்கும் நாம் கூறுவது ஒன்றுமில்லை. அத்தகையவர்களை அசைவற்ற தெளிவான தன்மையுடை யவர்கள் என்று திருக்குறளாசான் பாராட்டுகிறார்.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (654)

திருக்குறளில் வினைத்துய்மை என்னும் அதிகாரத்துள் கூறப்பெற்ற அனைத்துக் கருத்துகளும் உலகியல் பொருத்தம் உடையனவே, செயல் முனைப்புக் கொண்ட அனைவராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டுவனவே.

4. கீழ்மைச் செயல்கள்

தவறான, நேர்மையற்ற முறையல்லாத பழி தருகின்ற குற்றந்தருகின்ற, இழிவான, கீழ்மையான செயல்களைப் பேராசான், நன்றி பயவா வினை (652) ஒளிமாழ்கும் செய்வினை அஃதாவது பெருமையைக் குலைக்கும் செயல் (653), இழிவான செயல் (654), எற்றென்று இரங்கும் அஃதாவது எதற்கு இவ்வாறு செய்தோம் என்று பின்னர் வருத்தப்படுகின்ற செயல் (655), நல்லவர்கள் பழிக்கும் செயல் (656), பழிகளைத் தழுவிய செயல் (657) தவிர்க்க வேண்டும் செயல் (658) பிறர்க்குத்துன்பத்தை உண்டாக்கும் செயல் (659), ஏமாற்றுச் செயல் (650) என்று பலவாறு அவற்றின் தன்மைகள் புலப்படுமாறு கூறுவார்.

மேலும், எத்தகைய தேவைக்குரிய, கட்டாயம் செய்ய வேண்டிய கடமை தழுவிய செயல்களே ஆனாலும் பெருமையைக் குறைக்கும்: மானத்தைக் கெடுக்கும்; அத்தகையவற்றைச் செய்யவே கூடாது', என்பதைப் பலவாறு வற்புறுத்துகின்றார், அறமுதல் பேராசிரியர்.

5. தவறான வழியில் செல்லாதவர்கள்

இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். (961)

கச் சிறந்த பேராளுமை உடையவர்கள் (Great Administrators) சிறப்பல்லாத இத்தகைய இழிவான வழிமுறைகளில் ஈடுபடமாட்டார்கள்.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். (962)