பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

செயலும் செயல் திறனும்



மடல்கள் எழுதிப் பாராட்டி வந்தனர். அவர்களின் ஊக்க உரைக்கும் ஆர்வத்திற்கும் முதற்கண் நம் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கால், இதை நூல் வடிவில் கொணரவே பெருமுயற்சி தேவைப்பட்டது. இதைத் தக்கவர் ஒருவரைக் கொண்டு ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடும் எண்ணம் உண்டு. அதைக் காலந்தான் செய்தல் வேண்டும்.

இந்நூல் அச்சாகி வருங்கால், இதன் கட்டுரை வடிவ 40-ஆவது தொடருக்குப் பின், அஃதாவது 18ஆவது தலைப்பாக உள்ள இடையூறு கண்டு மனந்தளராமை என்னும் கட்டுரை இறுதியில், மேலும் 20 பக்கங்கள் அளவில் சில மனவியல் நுட்பங்கள் புதிதாக எழுதிச் சேர்க்கப் பெற்றிருக்கின்றன. அவ்விளக்கங்கள் அங்குத் தேவை என்று கருத வேண்டியிருந்தது. அவை பெரும்பாலும் மெய்யறிவியல் சான்ற கருத்துகளாகும். எனவே, மிகவும் பயனுடையவாக இருக்கும். இவற்றை வெறெந்த நூலிலும் பார்ப்பது கடினம்.

இந்நூலுக்கு அரியதொரு முன்மொழிவுரை நவின்ற தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடுகளாகிய துய தமிழ் அகரமுதலி, அறிவியல் சொல் அகரமுதலி ஆகிய இருபெரும் அகரமுதலிகள் பதிப்பாசிரியரும், இன்றைக்குத் தமிழ்ச்சொல் ஆய்விலும் அறிவிலும் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவரும் ஆகிய சொல்லாய்வறிஞர் திரு.ப. அருளி, வணிஇ சஇ, அவர்களுக்கு நம்நெஞ்சு நிறைந்த வாழ்த்தும் நன்றியும் உரியவாகுக.

என் இளைய மகன் திரு மா.பொழிலன், கமு, பொருளடக்கமும், பிழை திருத்தப்பட்டியும் எடுத்துதவினார். அவர்க்கும் நம் அன்பு வாழ்த்துக்கள்!

நம் நூல்களை முறையாக வெளியிடுவதற்கென்றே நம் உழுவலன்பர்கள் சிலரின் முயற்சியால் தொடங்கப்பெற்ற செந்தமிழ்நூல் தொகையையும் ஊதியத்தையும் கொண்டு, மேலும் இக்குழு இம்முயற்சியில் சிறந்த விளங்கவும் வெற்றி காணவும் நம் வாழ்த்துடன், அன்பர் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

இதனை அழகுற அச்சிட்டுதவிய புதுமைக் கலை அச்சக (நாவல் ஆர்ட் அச்சக) உரிமையாளர் பாவலர் திரு. நாரா. நாச்சியப்பன் அவர்களுக்கு எம் நன்றி.

கும்பம் உஎ

அன்புடன்

10-3-1988

பெருஞ்சித்திரனார்