பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

223



செப்பத்திற்குதவாது; பொருள் இழப்பும், வினைத்தொய்வும் இதனால் விளையும். அமைவான நடைமுறையே செயலுக்கு ஏற்றது.

16. எவர்க்கும் கட்டுப்படாமை: இவ்வுணர்வு அறிவு தழுவாமல் வெறும் மன அளவாக மட்டும் செயல்பட்டால் அது செருக்கு எனப்பெறும். இதுவே அறிவு தழுவிய உணர்வாக இயங்கினால் அது பயனுடைய உணர்வாக நின்று செயலுக்கு உதவும். ஒருவர்க்கு எளிதில் கட்டுப்பட்டு விடுகிற உணர்வை விட, எளிதே கட்டுப்படாத உணர்வே செயலுக்கு உரித்தானதாகும்.

17. கஞ்சத்தனமின்மை: கஞ்சத்தனம் என்பது சிக்கனத்தின் போலியான ஒருவுணர்வு. பொருட் பொறுப்பினால் இயங்குவது சிக்கனம் பொருளாசையால் இயங்குவது கஞ்சத்தனம். முதலது கடமையை உறுதிப்படுத்தித் தொடர்ந்த செயலுக்குத் துணையாக இயங்கும் உணர்வு. இரண்டாவது கடமை நன்கு நிறைவேறாமல், துணையாளரைப் பிரித்துத் தனிப்படுத்திச் செயலை நிறைவேற்றாமல் செய்யும் ஒர் உணர்வு.

18. எளிதில் இணங்கி வராத தன்மை: இப்படிப்பட்டவர்களிடத்துத்தான் செயல் பிடிப்பு, செயலுறுதி இருக்கும். ஒரு பணியில் ஈடுபட்டவர்கள் வேறு பணிக்கு எளிதில் மாறி விடுகிற உணர்வு செயலுக்குப் பயன்படாது. இத்தகையவர்களைத் துணையாகவோ, பணியாளர்களாகவோ கொள்ளக்கூடாது.

19. எதிலும் அதிகப் பற்று வையாமை: பற்றில்லாமல் எதிலுமே ஈடுபட இயலாது. ஆனாலும் செயல்திறம் உடையவர் எதிலுமே அதிகப்பற்று வைத்தலாகாது. ஒன்றை ஏற்கவும், ஒன்றைத் தவிர்க்கவும் ஆன உணர்வே செயலுக்கு உகந்தது.

இங்குக் கூறப்பெற்ற 19 உணர்வுகளும், ஒருவர் செயற்கையாக படிப்படியாக வருவித்து வளர்த்துக் கொள்ளும் உணர்வுகளாகும். அடுத்து வரும் 6 உணர்வுக்கூறுகளும், உலகியலால் ஒருவர் அறிந்து கொள்ளும் உணர்வுகளாகும். காலப்போக்கில் பட்டறிவால் ஒருவர் இவற்றைத் தாமே பெற்றுக் கொள்ள முடியும். எனவே, இது உலகியலறிவு எனப்பெறும். அதனையும் ஒரு சிறிது விளக்குவோம்.

1-1. செய்தியறிவு: பல வகையான செய்திகளை பற்றியும் அறிந்து கொள்ளுதல்.

1-2. செயலறிவு: பல வகையான செயற்பாடுகளைப் பற்றியும்