பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாருபாலா

109

"அதைக் கேட்கறிங்களா டாக்டர்! கேளுங்கோ, நன்னாக் கேளுங்கோ... ஆனா வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டா! இவ இருக்கிறா நாரும் நரம்புமா! இவ என்ன செய்யறா தெரியுமோ ...

"போடி அம்மா! அதை எல்லாம் அவரண்டை சொல்லணுமா..."

"வேறே யாரண்டை சொல்றது, உன்னோட சேஷ்டையை? இப்ப படுத்துண்டயே, என் மனசு கேட்கறதா...எட்டு ஊசின்னா போடணும் என்கிறார் டாக்டர்.இவ இருக்கிறா டாக்டர் ஒத்தை நாடி..சமூக சேவைன்னு சொல்விண்டு கிராமம் கிராமமா, சோறு தண்ணீ இல்லாமல் சுத்தறது! சேறு கூட்டறதாம், சுண்ணாம்பு அரைக்கறதாம். கேட்டேளா, தோட்ட வேலை செய்யறதாம்... காத்தாலே இருந்து சாயரட்சை இருட்டுறவரையில் இது...ஜுரம் வராமலிருக்குமோ...இவ உடம்புக்கு ஆகுமோ?சுண்ணாம்பிலே கைபட்டா நல்லதோ, சொல்லுங்கோ ....

"ரொம்பத் தப்பு! ரொம்பத் தப்பு!"

"எது தப்பு டாக்டர்! ஏதோ ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்யறது தப்பா?"

"அதை யார் தப்புன்னு சொல்வா! நம்ம ஜவஹர்லால்கூடச் சொல்லியிருக்காரே, சமூக சேவை சிலாக்கியமானதுன்னு ...'"

"சமூக சேவைன்னு சொல்லிண்டு சேறு கூட்டறதும், சுண்ணாம்பு அரைக்கறதும் தான் வேலையா... ஏன் டாக்டர்! அந்த வேலைக்கு இவதானா ஆப்ட்டா! அதெல்லாம் வாட்டம் சாட்டமா, கட்டையா உள்ளவா செய்யவேண்டியம்..."

"ஆமா. இவங்க உடம்புக்கு ஒத்து வராது... சளி அதனாலேதான் பிடிச்சுது; ஆனாலும் பரவாயில்லை. கால்ஷியம் கொடுத்தால் போதும்..."