பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கருப்பண்ணசாமி யோசிக்கிறார் மணி ஒலித்தது! கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கருப்பண்ணசாமி அலறியபடி உள்ளே ஓடலானார்; ஒளிந்து கொள்ள இடம் தேடினார். 'களுக்'கென ஓர் சிரிப்பொலி கேட்டது. கருப்பண்ண சாமி, கோபம் கொண்டு "வேதனைப்படுகிறேன் நான்- இந்த வேளையில் கேலி வேறு செய்கிறாயா?' என்று கேட் டார், சிரித்தபடி தன் எதிரே வந்த தேவியைப் பார்த்து. "கருப்பண்ணா! என்ன கலக்கம்! ஏன் ஓடுகிறாய். என்று தேவி கேட்க, கருப்பண்ணசாமி "காதிலே விழவில் லையா, மணிச் சத்தம்' என்று கேட்டார். , விழுந்தது——அது கேட்டு அச்சம் ஏன் வரவேண்டும்- ஆச்சரியமாக இருக்கிறதே”-என்று தேவி கேட்டார். உனக்கும் ஒன்றும் புரிவதில்லை. யாரோ பக்தர்களல் லவா வருகிறார்கள்" என்று பயத்துடன் பேசினார் கருப் பண்ணர். 'பைத்யமே! பக்தர் வருகிறார் என்றால் பயம் ஏன் வர வேண்டும்? உன்னைத் தொழ, சூடம் கொளுத்த, சோட சோபசாரம் செய்ய, படையல் போட வருகிறார்கள் பக்தர் கள். இதற்கு ஏன் பயப்படவேண்டும்... ஓஹோ! இவ்வளவு பூஜையை ஏற்றுக் கொண்டும் எங்கள் கஷ்டத்தைப் போக்கா மலிருக்கிறாயே கருப்பண்ணசாம்! என்று அந்த பக்தர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற பயமா?" என்றார் தேவி.