பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 சூதாடி இஸ்பேட் இரண்டடி, மேல்ஜாக்கும் இருந்தது.சரி. ஒரு கை பார்த்து விடுவது என்று தீர்மானித்து, 220 கேட்டு விட்டேன் ; சனியன் போல, கிளாவர் மணிலா ஒன்று ஷேக் காக இருந்து தொலைச்சுது.. "எதிர்க் கையிலே கிளாவர் ஜாக்கியோ? < "ஆமாம்--அதை ஏன் கேட்கிற? போ, கிளாவர் ஜாக்கேதான்; அவன் முதலிலேயே தட்டினான்...” "அட சனியனே! முதலிலேயே அதுதானா..." & 50 3 ஆமாம் சார்! இல்லையானா, எதிலாவது தள்ளித் தொலைத்து விடுவேனே, கிளாவர் மணிலாவை. சரி, என்ன செய்வதுன்னு மணிலாவைப் போட்டேன்.' 99 44 "போடாவிட்டா, விடுவானா? பிறகு...?' 'பிறகா! மேல் ஜாக்கி இருந்ததல்லவா என்னிடம், அந்து ஜாதி அவனிடம் இல்லை ; ஒரே ஒரு ஆஸ் இருந்தது. அதைத் தள்ளிவிட்டான், நான் கவனிக்கவில்லை; ஜாக்கி யைத் தட்டினேன்; அவ்வளவுதான்! ஒரு 'தழை' எட்டாம் 'பந்து'அதனாலே வெட்டிவிட்டான். அந்த ஜாக்கும்போச்சு. "முட்டாள்டா நீ. ஏன் முதலிலேயே துருப்பைத் தட் டக் கூடாது?'" "தட்டித் தொலைச்சேண்டா? கணக்கு எண்ணினதிலே தவறிவிட்டேன். துருப்பு கீழே விழுந்துவிட்டதுன்னு, கணக்கு செய்துவிட்டேன்,' 7* ,