பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சூதாடி சமயம் கவனித்துக் கொள்வோமென்று தீர்மானித்துக் கொண்டு, மோட்டாரைச் சரிபார்ப்பதுபோல இருந்தான். ஐயர் ஏறினார்; கார் நகர்ந்தது-ஐயர் பேசலானார். "மடையன்! இந்தச் சூதாடும் புத்தி உனக்கிருக்கும் வரைக்கும் நீ ஏதுடா உருப்படுவது? எப்படிப் பார்த்தா லும், இந்தச் சூதாட்டந்தானே உனக்கு.நீ எப்படி யோக்ய மாக, நாணயமாக இருக்க முடியும்? சூதாட்டக்காரப் பயலி டம் எப்படிடா நாணயம் இருக்கும்? என்று, புத்தி கூறும் பாவனையிலே திட்டிக்கொண்டேயிருந்தார். மோசஸ் என்ன பதில் கூறமுடியும்? கோபந்தான்; ஆனால் அவனோடிரைவர்; அவரோ முதல. கோபித்து என்ன செய்வது? எதிரே வந்த, இரட்டைமாட்டு வண்டிக்காரன் மீது காட்டினான் கோபத்தை எல்லாம். "புத்தியில்லேடா நாயே! நடுரோட் டிலே என்னடா வண்டி? ரொம்பத் திமிருடா உங்களுக்கெல் லாம்! ஏன்னா, ஆறணாவுக்குக் கேட்பாரத்துக் கிடந்த வைக் காக் கட்டு இப்ப ஒண்ணரை ரூபாய்க்கு விக்கறதாலே, உங் களுக்குத் தலைகால் தெரியலே. மோசஸ் சொன்ன வார்த்தை,வண்டிக்காரனுக்கு மட்டு மல்ல, மோட்டாருக்குள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஐயருக்குந்தான் பொருந்தும். ஐயருடைய "அம்சா மார்க் சோப்" கேட்பாரற்றுத்தான் கிடந்தது. யுத்த காலத் தேவை யினாலே, டஜன் ஆறணா தாளிக்கையில்லாத சோப்பு, ஒன்று ஆறணாவுக்கு விற்றது. அதனாலேதான் மோசசும் மோட்டாரும் ஐயருக்குக் கிடைக்க முடிந்தது. இது மோச சுக்குத் தெரியும். தெரிந்ததாலேதான், வண்டிக்காரனைத் திட்டினான். ஐயர், கனைத்தார்; அவ்வளவுதானே அவர் செய்ய முடியும்? கேட்க முடியுமா?"டே மோசஸ்! நீ என்னை மனதிலே வைத்துக் கொண்டுதான் வண்டிக்காரனைத் திட்டி னாய் என்று. "சரி. விடுடா! இந்தக் கிராமத்தான்கள் இப்படித்தான். நீ விடு, காரை" என்றார். மோசசுக்கு டபுல்மேஸ் வந்தது போன்ற சந்தோஷம். கொஞ்சதூரம் சென்று, வேறோர் வீட்டு வாசலில் நின்றது மோட்டார். ஆரனை அடிக்கச் சொன்னார். இரண்டு மூன்று தடவை