பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பூபதியின் ஒருநாள் அலுவல் 'ஏதோ எனக்கென்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர்! நான் ஒன்றும், அலைந்து திரியவேண்டிய அவசிய மில்லை. நிம்மதியாக வாழ எனக்கு வசதி இருக்கிறது. ஆண்டவன் அப்படி ஒன்றும் என்னை உழைத்து உருக்குலை யும்படியான நிலையிலே விட்டு வைக்கவில்லை. வாழ்வதற் காக வதைபடு என்று என் தலையில் ஒன்றும் எழுதியில்லை என்று கூறினார், ஓய்வூர் மிட்டாதார் ஒயிவானந்த பூபதி, கொஞ்சம் கோபத்துடன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த “பிர தர்’’ துரைசிங்கம் என்பவர். துரைசிங்கம், பூபதி யிடம் கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்து, யுத்தக் கடன் பத்திரங்களை அதிகமாக விற்று, "கவர்னர் பெருமான்' ஓய்வூருக்கு வரும்போது, இந்தப் பக்கத்திலேயே, அதிகமாக யுத்த உதவி செய்தவர், மிட்டா தாரர்தான் என்ற கியாதியை அடைய வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். யுத்தக் கடன் பத்திரங்களை விற்பது, யுத்த உதவி நிதி சேர்ப்பது இரண்டும் முதலிலே ஒயிலானந்த பூபதிக்குச் சந்தோஷமாக இருந்தது. அதிலும், மேற்படி நிதிக்காக, சங்கீதக் கச்சேரிகள், நாட்டியக் கச்சேரிகள் முதலியவற்றை ஏற்பாடு செய்யும்போது, 'ரொம்பக் குஷி' பூபதிக்கு. இந்தச் சந்தோஷத்துடன் கொஞ்சம் சுறுசுறுப்பாகவும் வேலை செய் தால் பலன் உருவாகும் என்பது துரைசிங்கத்தின் எண்ணம். யுத்த உதவித் தொகையின் அளவு உயர உயரத் தனக்கும் 'ராவ்சாகிபு' பட்டத்துக்கும் இடையே உள்ள 'தொலைவு' குறையும் என்பது துரைசிங்கத்தின் எண்ணம். எனவே பூபதியைச் சற்று அதிகமான சுறுசுறுப்புக் காட்டும்படி