இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72◯சேக்கிழார்
சரித்திர சம்பந்தமான செய்திகளையும் இப்பெரிய நூலில் காணலாம்.
திருத்தொண்டர் புராணத்திற்குப் பெரிய புராணம் என்னும் பெயரும் உண்டு. இந்நூல் எளிய நடையில் பாடப்பட்ட 1253 செய்யுட்களை உடையது. இது தமிழ் மக்களது செல்வம் எனலாம். இது இலக்கியம்-வரலாறு-கலைகள்-சமயங்கள் முதலியவை பற்றிய விவரங்களைக் கூறும் பெருங்காவியம். ஆதலின் நாம் இப் பெரு நூலினைப் படித்து, இதனை மிக்க ஆராய்ச்சியோடு நமக்குப் பாடித் தந்த சேக்கிழார் பெருமானுக்கு நன்றி செலுத்துவோமாக!