5. குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 'சிலமுறை ஆண்டு அகன்றதன் பின். பெரியபுராணத்தில் இடம் பெற்ற வரலாறு திருநாவுக்கரசர் புராண மாகும். பிறந்ததிலிருந்தே தம் வாழ்க்கை முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை எதிர்கொண்ட நாவரசர் செய்த ஒவ்வொரு செயலும் இன்றைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளவேண்டிய நல்ல பாடங்களாகும். சுந்தரர் பிறந்த அதே நடு நாட்டில், சுந்தரருக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர்ப் பிறந்தவர் ஆவார் நாவுக்கரசர் வளம் கொழிக்கும் மேட்டுக்குடியில் பிறந்த அவர், இளமையிலேயே தாய் தந்தையரை இழந்தவர் ஆவார். பெண்ணினத்திற்கே பெருந்திலகமாக விளங்கும் திலகவதியார் நாவரசரின் மூத்த சகோதரியாவார். ------ நாவரசரின் பெற்றோருக்கு முறையே திலகவதி யாரும் மருள்நீக்கியாரும் பிறந்ததைச் சொல்லவந்த சேக்கிழார் மிகச் சிறந்த முறையில் ஒரு பாடலைப் பாடுகிறார். . . . . . . . . . . . . . . . . . . . . ."
பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/152
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை