பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சேக்கிழார் தந்த செல்வம் திலகவதியார் செய்தி ஏன்? திலகவதியாரின் வாழ்க்கை நிலையைச் சொல்ல வேண்டிய தேவை இல்லையென்றாலும் சேக்கிழார் கூறக் காரணம், சமுதாய அடிப்படையில் கணவனோடு வாழ முடியாதவர்கள் எந்த முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள் என்பதைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு உணர்த்தவே சேக்கிழார் இதனை விரிவாகப் பாடினார் என்பதை அறிய வேண்டும். செல்வமலி மருள்நீக்கியார் பணிவாழ்வு : தம்பியாகிய மருள்நீக்கியார் (நாவரசர் எனும் பட்டம் பின்னரே அவருக்கு எய்திற்று) செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்தமையின் என்ன செய்தார் என்பதனைச் சேக்கிழார் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். மருள்நீக்கியார் நிரம்பித் தேசநெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய்க் காசினிமேல் புகழ்விளங்க - நிதி அளித்துக் கருணையினால் ஆசில் அறச் சாலைகளும் தண்ணிப் பந்தரும் அமைப்பார். (பெ. பு-1305)