பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வணிகர்குல மாணிக்கம் வணிகர் இயல் கீழ்கடற்கரையில் உள்ள காரைக்கால், மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் கடல் வாணிகத்தில் தலைசிறந்து விளங்கியது. அப்பெரும்பகுதியில் வாணிகப் பெருஞ் செல்வர் பலர் வாழ்ந்தனர். வாணிபத்தில் பெருஞ் செல்வம் சேர்க்க வேண்டுமானால் பொதுவாக நேர்மையான வழியில் அது முடியாது, பொய், ஏமாற்றுதல் என்ற இரண்டு கவசங்களை அணிந்து கொண்டால்தான் ஒருவர் பெருவணிகராக ஆக முடியும் என்ற நம்பிக்கை இந்நாளில் வேரூன்றி வளர்ந்துள்ளதை அறிவோம். ஆனால், பிற நாடு களுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்ட நம் முன்னோர் பலரும், அரசனுக்குக்கூடக் கடன் கொடுக்குமளவு பெருஞ் செல்வராக விளங்கினர் என்று வரலாறு கூறுகிறது. அப்படிப் பெருஞ்செல்வர் ஆவதற்கு அவர்கள் கையாண்ட வழிகள் என்ன என்பதை அறிவதற்கு ஆவலாக இருக்கின்றதல்லவா? மூன்றாம் நூற்றாண்டில் கடல் வாணிபத்தில் தலைசிறந்து விளங்கிய காரைக்கால் வணிகர்கள் என்ன வழியை மேற்கொண்டு, பெருவணிகர் ஆயினர் என்பதைச் சேக்கிழார் இதோ கூறுகிறார். மானம்மிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில் ஊனம் இல்சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஓங்குபதி