பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 சேக்கிழார் தந்த செல்வம் "பாங்குஅகன்று மனைவியார், பணிஅணிவார் தமைப்பரவி, ஈங்குஇது அளித்தஅருளிரேல் என் உரைபொய் ஆம் (பெ. பு-175) எனவே, மூன்றாவது பழத்தை அளித்தருள்க என்று வேண்டினார். இப்பாடலில் வரும், என்னுரை பொய்யாம்' என்ற அம்மையாரின் வேண்டுகோள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். ஈசன் அருள் என்று கூறினால், அது எந்தக் கடையில் கிடைக்கும்’ என்ற மனநிலையில் உள்ள கணவன்; இறையருளால் ஒரு மாங்கனியைப் பெறக்கூடிய தலையாய அடியார் ஒருவர். இந்நிலையை அம்மையார் பெறவேண்டு மானால் யான்', 'எனது என்ற அகங்கார, மமகாரங்களை அறவே சுட்டு எரித்தவராகவே இருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் அவர் பழத்தைப் பெற்றிருக்க முடியாது. அப்படியிருக்க, நான் இதுவரை கூறிய வார்த்தைகள் பொய்யாகி விடும், எனவே அருள் செய்க என்று கேட்பது, நின்று நிதானிக்க வேண்டிய இடம்.

  • { இல்லறத்தில் வாழும் ஒரு பெண்-தன் கணவனுடைய சோதனைக்குப் பதில் கூறவேண்டிய நிலையில் உள்ள பெண்-என் வார்த்தைகளைக் காப்பதற்காக நீ இன்னும் ஒரு பழம் கொடு' என்று