பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 சேக்கிழார் தந்த செல்வம் வேண்டுமே தவிர, என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு நான் எவ்வுருவில் இருந்தால் என்ன என்று பேசுகிறார். பேசுகின்றவர்களைப் பார்த்து மக்கள் என்று கூட சொல்லாமல் மாக்கள் என்று கூறுவதால் அறியாமை நிறைந்த அக்கூட்டத்தை மக்கள் தொகுதியிலிருந்து விலக்கிவிடுகிறார். - இப்பொழுது, பேய் வடிவிலிருந்து பேசும் அம்மையார், அழகுடைய பெண்ணுக புனிதவதியார் என்ற பெயருடன், பரமதத்தனுடன் வாழ்க்கை நடத்தும் காலத்தில், அடியார்க்குக் பழம் இட்ட நிகழ்ச்சியைக் கூறியது தவிர வேறு எங்கும் வாயே திறக்கவில்லை. உண்மை தெளிந்தவன் செயல் மாங்கனி மறைந்தவுடன், அடியார்களையும் அவர்களது ஆன்மிக சக்தியையும் பரமதத்தன் நன்கு புரிந்து கொண்டான். இந்த மாபெரும் அடியவரை மனைவி என்று கருதி அவருடன் வாழ்வதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பொழுது அவன் செய்திருக்கக்கூடிய காரியம் இரண்டே இரண்டுதான். ஒன்று, சுற்றத்தார் அனைவரையும் கூட்டி "இவர் மனித வடிவுப் பெண்ணல்ல, மனித வடிவில் வாழும் தெய்வமாவார் நீங்களும் இவரை வழிபட்டுப் பயன் அடையுங்கள்”