பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை துறந்தார் . 327 வினாடியில் பெரியவராகிவிடுகிறார். அது எப்படி ஒரு வினாடியில் பெரியவராவது வள்ளுவன் குறளை நினைவிற்கு கொண்டுவருவது நலம். செயற்கரிய செய்வர் பெரியர் என்பதுதானே பெரியவர்களுக்குரிய இலக்கணம்: இப்பொழுது தில்லையில் வாழ்ந்த வேட்கோவரான ஒரு சராசரி மனிதர், எம்மைத் தொட்டால் திருநீலகண்டம் ஆணை’ என்ற சொற்களைக் காதில் கேட்கிறார். ஒரு மனைவியானவள் கோபத்தில் பேசுவதற்கு எல்லாம் பொருள் செய்யத் தொடங்கினால் உலகம் நடைபெற முடியாது. ஆகவே தான் காதலர்கள் செய்து கொள்ளும் சத்தியத்திற்கும் கணவன் மனைவியர் ஊட்லில் செய்துகொள்ளும் ஆணைக்கும் பொருள் செய்யக்கூடாது என்று உலகிடை உள்ளோர் கூறுவர்." திருநீலகண்டர் நம்மைப்போல் சாதாரண மனிதராய் இருந்து, மனைவியின் இந்தச்சொற்களுக்கு அதிக மதிப்புத் தராமல் மனைவியைத் தொட்டிருந்தால், மனைவியார் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பது உண்மைதான். அவ்வாறு செய்யாமல், அம்மையாரின் ஆணையில் குறிக்கப் படாத ஒரு பொருளை, அந்த ஆணையை வைத்த அந்த அம்மையார்கூடக் கனவிலும் கருதாத ஒரு பொருளை, இப்பொழுது திருநீலகண்டர் அந்த ஆணையில் ஏற்றிக் காண்கிறார். அவ்வாறு கூறக்