பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப்போவார் தீக் குளித்தது. ஏன்? 353 ஆலயங்களில் இவ்வாறு வணங்க முடியாதே தவிரத் தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் நூற்றுக்குத் தொண்ணுற்று ஒன்பது கோயில்களில் புறத்தே நின்று மூலத்தானத்தில் இருக்கும் பெருமானை வணங்க முடியும். தமிழ் நாட்டுக் கோயில் முறையின் அமைப்பும் அவ்வாறு இருந்தமையின் நந்தனாருக்கு இது எளிதாக முடிந்தது. எனவே, உள்ளே சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஓரளவு தோன்றி இருப்பினும், அதற்குத் தம்முடைய பிறவி தடையாக இருக்கின்றது என்று நினைத்த காரணத்தால் உள்ளே செல்லாமல் புறத்தே நின்று மூலத்தானத்தை வணங்கி வரும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். திருப்புன்கூர் திருப்புன்கூர் சென்றபொழுது வழக்கமாக அவர் மேற்கொள்கின்ற வழிபாட்டு முறை தடைப் படலாயிற்று. காரணம், ஏனைய ஊர்களைப் போல் அல்லாமல் திருப்புன்கூரில் உள்ள நந்தியம் பெருமான் மிகப்பெரிய வடிவத்தில இருந்தார். மூலத்தானத்தின் வாயிலை முற்றிலும் மறைத்துக் கொண்டிருந்த நந்தியம் பெருமானுடைய வடிவம் வாயிற்புறத்தில் நின்று உள்ளே காண வேண்டு மென்ற ஆர்வத்தோடு கண்களை ஒட்டிய நந்தனாருக்குப் பெருந்தடையாக அமைந்துவிட்டது. செய்வது அறியாத நத்தனார். -