பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் 387 செய்வான். ஆனால், முன்னர்க் குறிப்பிடப்பட்ட நாலாவது நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இயற்பகையாருக்கு, நின்பால் உள்ள ஒன்றை வேண்டி வந்தனம். அதனை நீ கொடுக்க முடியும் என்றால் மேலே சொல்லலாம் என்றான். விரும்பி வந்தது இன்னது என்று கூறாமலேயே இவரைச் சிக்க வைக்கப் பார்க்கிறான். மிகச் சாதாரணமான சராசரி மனிதன் கூட, 'உனக்கு என்ன வேண்டும் என்று சொல். அது முடியுமா என்று பார்க்கிறேன்’ என்றுதானே விடை கூறி இருப்பான்? -உண்டாயின் அடியவர் உடைமை இப்பொழுது, இயற்பகையார் கூறிய விடையைப் பின்வரும் பாடலில் காணலாம். என்ன, அவ்உரை கேட்டுஇயற் பகையார் 'யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை; ஐயம் இல்லைநீர் அருள்செயும் என்ன, 'மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு'என அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுதுஉரை செய்வார். - (பெ. பு-410)