பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

கண்ணோட்டத்தில் பெரிய புராணத்தைக் காண முயன்றேன்.

அந்த முயற்சியின் பயனாகவே, வானொலி பேச்சுக்கள் அமைந்தன. அதனைக் கேட்ட பலரும், இத்தகைய முயற்சி காலத்துக்கேற்ற ஒன்று என்று பாராட்டினார்கள். ஆந்திர பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தரும், ஸ்ரீஅரவிந்தரின் சிறந்த பக்தருமான திரு கே.ஆர்.சீனிவாச அய்யங்கார் அவர்கள் பெரிய புராணத்தை நான் காணும் முறை சரியானதே என்று பாராட்டியதுடன், எழுதுமாறு பணித்தார்கள்.

இந்த வானொலி பேச்சுக்களைக் கேட்ட, அருமை நண்பர் வானதி திருநாவுக்கரசு அவர்கள் உடனே எழுதித் தருமாறு வேண்டினார்கள். வானொலி பேச்சுக்கள் காதால் கேட்கும் பொழுது தரும் பயனை, எழுத்து மூலம் தரும் பொழுது தரவில்லை என்பதை கண்டறிந்தேன்.

எனவே, வானொலி பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு அதில் கூறத்தக்க கருத்துக்களோடு இன்னும் பலவற்றையும் சேர்த்து நூல் வடிவாக்கினேன்.

எனது நல்லூழின் பயனாக, இந்நூலை சேக்கிழார் ஆராாய்ச்சி மையம் ஆண்டு தோறும் கொண்டாடும் சேக்கிழார் விழாவின் ஐந்தாவது விழாவில், 25-7-97 அன்று வெளியிடும் நல்வாய்ப்பு கிடைத்தது.