இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
vii நூலை வெளியிட இசைந்த சேக்கிழார் ஆராய்ச்சி மையத் தலைவர் நீதிபதி திரு. எஸ்.நடராஜன் அவர்கட்கு என் நன்றி உரியதாகும். இந்நூல் தோன்றக் காரணமாக இருந்த வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் திரு.விஜய திருவேங்கடம் அவர்கட்கும், உதவி இயக்குனர் திருமதி. கலாரவிக்கும் என் நன்றி உரியதாகும். வழக்கம் போல் கையெழுத்துப் பிரதியிலேயே இதனை படித்து, வேண்டுமான இடங்களில் மாற்றம், விளக்கம் என்பவை இடம்பெற வேண்டும் என்று கூறி உதவிய அருமை நண்பர் மா.ரா.போ.குருசாமி அவர்கட்கு என் நல்வாழ்த்துக்கள் உரியதாகும். . பார்வை இல்லாத நிலையில் நூல் முழுவதையும் என் வாய்மொழியில் கேட்டு எழுத்து வடிவில் கொண்டு வந்த என் மகள் ஞா.மீராவிற்கும், இதனை அச்சிட்டு வெளியிட்ட கங்கை புத்தக நிலையத்தாருக்கும் என் நல்வாழ்த்துக்கள் உரியதாகும். அ.ச.ஞானசம்பந்தன். சென்னை-83. 97--س7ساس-25ڑ