34 காப்புப் பருவம் னுக்குத் தன் பரிசனங்களால் தீங்கு வராவ்ண்ணம் வெளியே விட்டு வருமாறு கட்டளையிட்டு இறைவன் திருவடி உற்றனர். விறல்மிண்டர் செங்குன்றுார் வேளாளர். முன்னர்த் திருத் தொண்டர்களை வணங்கி, பின் சிவனுரை வணங்கும் கடப் பாடுடையவர். சுந்தரர் திருவாரூர் சென்றபோது, தேவா சிரிய மண்டபத்தில் இவர் அடியார் நடுவுள் இருந்த நிலையில் அவர் வனங்காது போவதைக்கண்டு, சுந்தரரும் தமக்குப் புறம்பு, சிவபெருமானும் புறம்பு என்று கூற, சுந்தரர் அடி யார்க்கு அடியேன் என்று அமைந்த திருத்தொண்டத் தொகையினைப் பாட மகிழ்ந்தவர். அமர் நீதியார் பழையாறைப்பதியில் துணி வாணிபம் செய்துகொண்டு, அடியார்கட்குக் கோவணம் கொடுக்கும் தொண்டில் ஈடுபட்டவர். ஒருமுறை சிவபெருமான் இவரிடம் வந்து, தம்மிடம் இருந்த கோவணத்தைக் கொடுத்து நீராடி வந்து, பின் பெற்றுக்கொள்வோம் என்று கூறிச்சென்று மீண்டுவந்து கேட்டபோது, அக்கோவனம் காணுதுபோ கவே, சிவபெருமான் தம்மிடம் இருந்த மற்ருெரு கோவணத் தைத் தராசில் வைத்து அதற்கு ஈடாகக் கோவண ஆடை கொடுக்குமாறு கேட்கத் தம்மிடம் இருந்த எல்லாத் துணி, மணி, ஆபரணங்களையும் வைத்தும் நிறை காணு நிலையில் தாம் தம் மனேவியாருடனும், தம் குழந்தையுடனும் ஐந்தெ ழுத்து ஒதி ஏறத் தட்டு நிறை கண்டது. இறைவர் காட்சி தந்து அருள்புரிந்தார். இவ்வெழுவர்தம் தொண்டும் குற்றம் அற்ற தொண்டு ஆதலின் 'வழு அரும்” எனப்பட்டது. இதனே இவர்களைப் பற்றிச் சொன்ன வரலாற்றுக் குறிப்புக்களே ஆழ்ந்து சிந்தித் தால் நன்கு தெரிந்துகொள்ளலாம். ஆண்டவனிலும் அடி யார் சிறந்தவர்கள் ஆதலின், எப்போதும் ஏத்தெடுத்தல் இன்றிஅமையாததாயிற்று.
பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை