பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மையால் உலகாண்ட மும்மைமறை யும்பரவும் மும்மைஉல கும்புகழும் மும்மையாப் பகரம் ஆதி மும்மை உயிர் குறில்நெடில் தனித்தும்மத சவ்வூர்ந்தும் முதல் அமையும் நாமம் உற்ருர் செம்மைபெறும் மும்மையாம் வருணத் துதித்துச் சிறந்தோங்கும் மூர்த்தியார்முன் செறியும் இரு மும்மையார் செம்பொன் பதாம்புயம் சென்னிவைத்தேத்தெடுப்பாம் நம்மை அருள் சிவபாத இருதயர் உளத்துவகை நண்ணஒண் பொருள் ஆதலால் நாடும்.உழ வாரவலம் இயைதலால் யாவோரும் நாவலர் பிரான் என்ன லால் வெம்மை தவிர் புகலியார்முேதல் மூவ ரும்புகலும் வேதத் தமிழ்க்கண் உள்ள மெய்ம்மையை விரித்துத் தெரித்தருள் செய் குன்றை வேந்தைப் புரக்கஎன்றே (யூர் {அ - சொ) சிவபாத இருதயர் என்பார், திருஞான சம்பந்தருடைய தந்தையார். உவகை = மகிழ்ச்சி, நண்ண = பொருந்த, ஒண்பொருள் = ஒளியுடைய .ெ பா ரு ள ம், குழந்தை (திருஞான சம்பந்தர்) உழ வாரம் = புல் பூண்டு களைச் செதுக்கும் ஒர் இரும்புக்கருவி. வலம்= வலப்பக்கம் இயைதலால் = பொருந்தி இருப்பதால், நாவலர் = நாவன்மை யுடையவர், பிரான் = தலைவர், நாவலர் பிரான் = திருநாவ லுரரில் பிறந்த சுந்தரர், வெம்மை = பிறவியாகிய வெம்மை, சுரநோயாகிய வெப்பம். புகலியர் = புகவி என்னும் ஊரில், பிறந்த திருஞான சம்பந்தர், முதல் = முதன்மையான, மூவர் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், புகலும் = சொல்லும், வேதத் தமிழ்=