பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காப்புப் பருவம் இதனுல்தான் ஈண்டு 'உம்பல் தாவும் திறல் அரிக் குருளைபோல் எழுந்து' எனப்பட்டது. திருஞான சம்பத்தர் எல்லாரையும் இன்பக் கடலில் அழுத்தியதை இவரது வரலாற்றில் பரக்கக் காணலாம். 'ஐவரை வெல் அறுவர்' என்ற தொடரில் முரண் தொடையும், எண் அலங்காரமும் அமைந்திருத்தலைக் கண் தி Վ ԼՈ, (Աք ;زيf (ii(ئي ژئي இன்புறுக. ஐவர் எனப் பஞ்ச இந்திரியங்களாகிய மெய் வாய், கண், மூக்கு, செவி என்றவற்றை அர் விகுதி கொடுத்துச் செப்பியது திணை வழு அமைதி பற்றி ஆகும். அறுவர் திருஞானசம்பந்தர், கலிக்காமர், திருமூலர், தண்டி அடிகள், மூர்க்க நாயனுர், சோமாசி மாறர் என்பவர்கள். சேக்கிழார், 'திருஞானசம்பந்தர் வரலாறு கூறத் தொடங்கும்போது, "பாதமலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்' என்றும், ஏயர்கோன் கலிக்காமரைக் குறிப்பிடும்போது, 'ஏயர் கோளுர் மலரடி வணங்கி” என்றும், 'திருமூலதேவர் மலர்க் கழல் வணங்கி” என்றும், 'கண்ணின் மனிைகள், அவை இன்றிக் கயிறு தடவிக் குளம் தொட்ட எண்ணில்பெருமைத் திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி' என்றும், மூர்க்கர் கழல் வணங்கி” என்றும், திருவடிகளைப் போற்றியதுபோல ஈண்டும் பிள்ளை அவர்கள் 'பொற்பாத மலர்உச்சி வைத்து ஏத்தெடுப்பாம்” என்றனர். அறுவர் வரலாறுகள் பின்வருவன. திருஞான சம்பந்தர் : இவர் சீர்காழியில் கெளனிய மரபில் சிவபாத இருதயர்க்கும் பகவதியார் எனும் அம்மை யார்க்கும் திருமகனுராகத் தோன்றி, இறைவி தந்த ஞானப் பால் உண்டு, திருஞான சம்பந்தர் எனத் திருப்பெயர் பெற்ருர், திருக்க்ோலக்காவில் தாளம் பெற்ருர். திருநெல் வாயில் அறத்துறை இறைவர் தந்த பல்லக்கில் ஏறிச் சென்று தலங்கள்தோறும் பதிகம் பாடி வந்தார். கொல்லி மழவன் மகளின் முயலகன் என்னும் நோயைப் போக்கினர். திருக் கொடிமாடச் செங்குன்றுாரில் உடன் இருந்த அடியார்கள் பட்ட குளிர் நோயைப் போக்கிர்ை. திருப்பட்டிச் சுரத்தில்