பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 9 | விநாயகர் புராணம் ஊறுகள் நீக்கித் துனிவற முடிவு போக்கிடுமாறு சூழ் தர வல்லவன் அண்மச்சன்' என்றும், 'இறைவனுக்கு சுகிதம் எண்ணும் மந்திரியும்' என்றும், அறிவதும் செயலும் ஒழிவதும் அரசர்க் காக்கமே குறித்தன ஆகும் திறனும் நன்றறியா அரசருக் குறுதி செப்பலும் செய்வன வேனும் அறும்உல கியற்கைக் கொத்திடின் செயலும் ஒருவினைக் கியைந்தபல் செயலும் நிறுவவ தொன் ருல் வாய்ப்பளஞ் ஞான்றும் நிகழ்த்த்லும் அமைச்சருக்கு இயல்பா ம் என்றும் கூறுதல் காண்க. தோலாமொழித்தேவர் செய்த சூளாமணியில், தெறிந்தவர் தெளிந்த நூலாம் சிறந்தன தெரிந்து கூறி அறிந்தவை ஆற்ற நிற்கும் அமைதியான் அமைச்சன் ஆவான் என்றும், மற்றவர்க் குறுதி நோக்கி வருபழி வழிகள் துாரச் செற்றவர்ச் செகுக்கும் சூழ்ச்சி தெருண்டவர் கண்ட தன்றே என்றும் அறிவித்தல் காண்க: பழமொழிகள் நானுாறு, 'உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக் குலேத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் குறுத்தல் மலைத்தழுது உண்ணுக் குழவியைத் தாயர் அலேத்தும்பால் பெய்து விடல் என்றும், மூரித்தேன் தாரி ய்ைநீ முனியினும் உறுதி நோக்கிப பாரித்தேன் தரும துண்,நூல் வழக்கது வாதல் கண்டே என்று சீவக சிந்தாமணியும்,