பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 99 ஆனால், பதினேராம் திருமுறையில் இந்நூல் காணப்பட வில்லை. அது செல்லுக்கிரையாயது போலும் திருக் கையிலையில் 'திருக்கயிலாய ஞான உலா' என்னும் நூலேப் பாடினர். இவர்க்குச் சேரமான் பெருமாள் நாயனர் என்ற பெயரும் உண்டு. இவர்க்குக் கொடை என்னும் அடை உண்டு என்பது, சேரர்க்கு இறைவர் எழுதிய திருமுகப் பாசுரத்திலும் 'பருவக் கொண்முப் படிஎனப் பாவலர்க்கு உரிமையின் உதவி' என்று குறித்திருப்பதாலும், சேக்கிழாரும் 'பருவ மழைச் செங்கை' என்றும், நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற் றமர்கின்ருர் இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையில்ை செம்பொன் மழையாம் எனப்பொழிந்து திருந்து வென்றி உடன்பொருந்தி உம்பர் போற்றத் தம்பெருமாற் குரிய வேள்வி பலசெய்தார் என்றும் குறிப்பிடுதல் காண்க. வைவேல் அடைபொருந்தப் பெற்றவர் கூற்றுவ நாயஞர். இதனே மேலே காட்டப்பட்ட திருதொண்டத் தொகைப் பாட்டில் 'வேல் கூற்றன்” என்று கூறப்பட் டிருத்தல் கொண்டு தெளிக, கூற்றுவ நாயனர் கள ந்தைப் பதியின் தலைவர். குறுநில மன்னர். அடியார் பக்தியில் சிறந்தவர். ஐந்தெழுத்தை இடையருது ஒதுபவ்ர். இவர் வேற்றரசர்களை வென்று நாற்படை கொண்டு விளங்கினும் முடிசூடா மன்னராய்த் திகழ்ந்தார். இக்குறையை நீக்கத் தில்லை வாழ் அந்தணர்களிடம் சென்று, தமக்கு முடி சூட்ட வேண்டினர். "அவர்கள் சேர சோழ பாண்டியர்கட்கு மட்டுமே முடி சூடுவோம்' என்று கூறி மறுத்தனர். நாயனர் வருந்தித் துயின்றபோது இறைவர் அவர்க்குத் தம் திருவடி களையே முடியாகச் சூட்டினர். அத்திருவடிகளேயே முடியாகக்