பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 காப்புப் பருவம் திருநீலகண்ட யாழ்ப்பாணர்: திருஎருக்கத்தம் புலியூரின் பாணர். சம்பந்தர் பாடலுடன் தம் யாழ் இசை கூட்டிய வர். சடையனுர்: திருநாவலுரரினர்; சுந்தரரைப் பெற்றவர். இசைஞானியார்: சுந்தரரைப் பெற்றவர். சுந்தரர்: நம்பி ஆரூரர் என்னும் பெயரினர். இறைவர் ஆவணம் காட்டி அடிமை என நிறுவப்பெற்றவர். திருநாவலூர்க்குத் தலைவர். திருவருட் துறை இறைவர்க்கு நான் ஆள் எனப் பாடியவர். திருத்துருத்தி, வேள்விக்குடி இறைவா, உன்னே மறந்த குற்றம் நீங்க அருள்க என்று வேண்டியவர். வன்தொண்டர் என்னும் பெயரினர். திருவாரூரன் எ ன் னு ம் பெயரினர். சங்கிலியாருடன் இன்பம் துய்த்தவர். தமக்கு அடைகாய் தரும் கூனன் குருடனுக்கு அருள் புரிந்தவர். திருப்புகலூர் இறைவன் பால் செங்கல்லைப் பொன்னகப் பெற்றவர். முதலேயுண்ட பாலனை அழைத்தவர். திருமுருகன் பூண்டியில் வேடரைப் படுத்தவர். நூல்போன சங்கிலியை மணந்தவர். திருமுது குன்றுாரில் பெற்ற பொன்னத் திருவாரூரில் பெற்றவர். மேலே கூறப் பட்டவை நம்பியாண்டார் வாக்கால் அறியக் கிடைப்பன. சைவத் திருமுறைகளின் மூ ல ம் நாயன்மார்கள் அனைவர்களைப்பற்றிய குறிப்புக்களே அறிய முடியவில்லை. ஒருசிலரைப் பற்றிய குறிப்புக்களே காணக் கிடைக்கின்றன. முதல் மூன்று திருமுறைகளில் பன்னிருவர் பற்றிய குறிப் புக்கள் அறியவருகின்றன. அவர்கள் சண்டேசுவரர், கண்ணப்பர், நமிநந்தி அடிகள், கோச்செங்கட் சோழர், முருகர், சிறுத்தொண்டர், திருநீல நக்கர், மங்கையர்க்கரசி யார், குலச்சிறையார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், தண்டியடிகள், புகழ்த்துணையார் ஆவர். சண்டேசுவரரைப்பற்றி அறியும்போது அவரது வரலாற் றைப் பெரிதும் அறிகிருேம். அவர் தம் தாதைதாளே வெட்டி