காப்புப் பருவம் [19 சிறுத்தொண்டரைப்பற்றிப் பாடுகையில் அவர் தம் திருமகளுர் பெயரையும் அவர் வாழ்ந்த ஊரையும் இணைத்து, 'சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடிமேய' என்று பாடிக்காட்டினர். திருநீலநக்கரைக் குறித்துக் கூறும்போது அவர் இன்ன ஊரினர் என்பதை, நிறையினர் நீலநக்கர் நெடுமாநகர் என்றுதொண்டர் அறையும் ஊர் சாத்த மங்கை அயவந்தி என்று அருளிப்போந்தார். மங்கையர்க்கரசியாரைப் ப ற் றி ப் பாடும்போது, அவ்வம்மையார். சோழன் மகளார், மானி என்னும் பெய ரார், பாண்டிமாதேவியார், திருநீற்றை வளர்ப்பவர் என்று குறிப்பிட்டிருப்பதை, ' மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கை மானி என்றும், 'சிவன் திரு நீற்றினை வளர்க்கும் பந்தணைவிரலாள் பாண்டிமா தேவி' என்றும், பாடிய பாடல்களால் தெளிக. குலச்சிறையாரைக் குறிப்பிடும்போது, 'கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை' 'வெற்றவே அடியார்மிசை வீழும் விருப்பினன்' 'அடியவர் தங்சுளைக் கண்டால் குணங்கொடுபணியும் குலச்சிறை' கோவனம் பூதிசாதனம் கண்டால் தொழுதெழு குலச்சிறை' 'நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத்தோதி”
பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/201
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை